ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

356 0

மூதூர் பகுதியில் 90 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவரை நேற்று (21) இரவு கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டப்பறிச்சான் மற்றும் தாகா நகர் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரிடம் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மற்றைய நபரிடம் 40 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் தமது உடைமையில் வைத்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.