தடுப்புக் கைதிகள் குறித்த ஜே.வி.பியின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில்!

318 0

1309312674parlimentநாடாளுமன்றத்தில் இன்று அரச சேவைகள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த குழு நிலை விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் வினா ஒன்றுக்கு பதில் வழங்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.