ராஜபக்சவினருக்குப் பின்னால் செல்ல மாட்டேன்: நிருபமா ராஜபக்ச!

394 0

irupaராஜபக்சவினர் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான புதிய கட்சிக்கு சென்றாலும் தான் ஒருபோதும் கட்சியை விட்டு செல்லப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முல்கிரிகல தொகுதியின் அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சி விட்டு மாறி அங்குமிங்கும் தாவி எனக்கு பழக்கமில்லை. நான் சிறந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்.

இதனால், நான் கட்சியை காட்டிக்கொடுத்து விட்டு வேறு கட்சியில் இணைந்து கொள்ள மாட்டேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியலில் ஈடுபடுவேன்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டு செல்வாரா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. எனினும் நான் செல்ல மாட்டேன்.

எதிர்காலத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவேன் என நிருபமா ராஜபக்ச கூறியுள்ளார்.ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மகிந்த ராஜபக்சவின் பெரியப்பாவின் மகளான நிருபமா ராஜபக்சவின் கணவர் திருகுமார் நடேசன் என்ற தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.