வற்வரி குறைக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன உறுதி

445 0

maithri-1அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்படும் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென, கொழும்பில் இன்று நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கத்தின் கடன்சுமையை ஈடுசெய்வதற்காக, நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வற்வரி குறித்து பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் கிளம்பிய நிலையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment