காவல்துறையென மக்களை ஏமாற்றிய புலனாய்வுப் பிரிவினர்

11603 0

police-logo-720x480தாம் சிவில் காவல்துறையினர் எனக்கூறி பிரச்சனையொன்றைத் தீர்க்கச்சென்ற சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவிரினர் தொடர்பாக யாழ்ப்பாணக் காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  யாழ். நாவாந்துறைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வீடொன்றில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவர் தாம் சிவில் காவல்துறையினர் எனக்கூறி உங்களின் பிரச்சனையைத் தீர்த்துவைப்பதற்காக வருகை தந்துள்ளோம் எனக் கூறியுள்ளனர்.

பின்னர், அவர்களின் கதை மற்றும் நடத்தைகளில் சந்தேகங்கொண்ட குறித்த வீட்டின் இளைஞன் யாழ்ப்பாணக் காவல்துறைக்குத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, குறித்த வீட்டிற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை செய்ததுடன் கடுமையாக எச்சரித்தும் அனுப்பியுள்ளனர்.

Leave a comment