அன்ரன் டெனிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மன்னார் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

455 0

download-5-350x350பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தியோகு அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தரை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட அலுவலக அதிகாரிகள் மன்னார் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர்.  பிரியதர்சன மற்றும் சட்ட அதிகாரி    வசந்தராஜ் உள்ளிட்டோர் நேற்று வெள்ளிக் கிழமை இரவு 7 மணிக்கு பார்வையிட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டுள்ள மனித உரிமை அதிகாரிகள், சந்தியோகு அன்ரன் டெனியின் உடலில் ஏற்பட்டுள்ள சூட்டுக் காயங்களை புகைப்படமும் எடுத்துள்ளனர்.

எனினும் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு  சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட அலுவலக அதிகாரிகள்  சந்தியோகு அன்ரன் டெனி  என்பவரின் குடும்பத்திற்கு  பாதுக்காப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். சந்தியோகு அன்ரன் டெனி தொடர்பில்  நேரடியாக தாம் பெற்ற வாக்குமூலம் மற்றும் அவரது உடலில் ஏற்பட்டுள்ள எரிகாயங்கள் தொடர்பாக   அறிக்கை ஒன்றை தயாரித்து  மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  தலைமை  அதிகாரிக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Leave a comment