அரசமைப்பு சபை இன்று கூடுகிறது

233 0

அரசமைப்பு பேரவையின் மற்றுமொரு கூட்டம், அதன் தலைவரும் எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இன்று (03) கூடவுள்ளது.

இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உள்ளிட்ட அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

“மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள், இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்கள் ஆகியவற்றை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடப்படும்” என, அரசமைப்பு பேரவையின் செயலாளரும், நாடாளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

“நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, தேசிய கொள்வனவு ஆணைக்குழு ஆகியவற்றால் முன்வைக்கப்பட்டுள்ள காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள், இதன்போது மதிப்பீடு செய்யப்படவுள்ளன” என்றார்.