தனியார் வைத்தியசாலைகள் இரத்தப் பரிசோதனைக்குத் தடை

421 0

health-ebola-vaccineஅரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள், தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு தடைவிதிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  இதற்கமைய, ஆய்வுகூடங்கள் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் இரத்தப் பரிசோதனை இயந்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் தனியார் வைத்தியசாலையில் இரத்தப் பரிசோதனை செய்வதைத் தடைசெய்யமுடியாது.

Leave a comment