சஜித் பிரேமதாச யாழில் 800பேருக்கு வீடமைப்புக் கடன் வழங்கினார்

1318 0

housingn-loan-in-kilinochi-4யாழ்ப்பாணத்தில் 800 பயனாளிகளுக்கு வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகளை அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று வழங்கி வைத்துள்ளார்.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு நடைபெற்றது.

2025இல் அனைவருக்கும் வீடு என்ற தொனிப்பொருளின் கீழ் நாடு முழுவதும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ், யாழ் மாவட்டத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்பவர்கள் தமது வீடுகளைக் கட்டுவதற்காககவும், அல்லது திருத்துவதற்காகவும், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அடிப்படையில் இப்பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

இத்திட்டத்தினால் 50 ஆயிரம் தொடக்கம் 3 இலட்சம் வரையான கடன் வழங்கப்படுகின்றது.இந்நிகழ்வில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உட்பட துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a comment