வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு – வனத்தமுல்ல, 174 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலஞ்சம் பெறும் நடவடிக்கையில் தரகராக செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.