கிளிநொச்சியில் சாராயம் வைத்திருந்த பெண்ணுக்குத் தண்டம்

296 0

sarayamகிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை விற்பனை செய்த மற்றும் உடமையில் வைத்திருந்த பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் 175 மில்லி லீற்றர் அரச சாராயத்தினை பணத்திற்கு விற்பனை செய்தமை மற்றும் அனுமதியின்றி அரச சீல் சாராயத்தினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த பெண்ணை நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, அப்பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.