ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

277 0

pothujana-peramunaஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  உறுப்புரிமையை பெற்றுக்கொண்ட சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று இணைந்து கொண்டுள்ளனர்.

பத்தரமுல்லை – நெலும் மாவத்தை பகுதியிலுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பிரதான செயற்பாட்டு அலுவலகத்தில் இவர்கள் தமது உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற பிரதம அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களே இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டுள்ளனர்.

அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் மொறட்டுவ முன்னாள் நகர சபைத் தலைவர் சமன் லால் பெர்ணான்டோ, வலல்லாவிட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உதேனி அத்துகோரல, மஹரகம முன்னாள் நகர சபைத் தலைவர் காந்தி கொடிகார உள்ளிட்ட 10 பேர் தமது உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடமிருந்து இந்த உறுப்புரிமையை அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.