கொழும்பு மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக யாழைச் சேர்ந்தவர் நியமனம்!

219 0

கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் புதிய துணை ஆயராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருட்தந்தை அன்ரன் றஞ்சித் பிள்ளைநாயகம் அடிகளார் ; பாப்பரசரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1966 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்த அருட்தந்தை அன்ரன் றஞ்சித் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.

அருட்தந்தை அன்ரன் றஞ்சித் அடிகளார் கொழும்பு சென்.ஜோசப் கல்லூரியின் உதவி அதிபராக கடமையாற்றியுள்ளதுடன் தமிழ் மெய்யியல் துறையின் தலைவராகவும் இதுவரை பணியாற்றிவந்துள்ளார்.

கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை அன்ரன் ரஞ்சித், 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கொழும்பு உயர் மறைவட்டத்தின் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

இங்கிலாந்தில், கல்வியியலிலும், யாழ்ப்பாணத்தில் மெய்யியலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ள புதிய துணை ஆயர், கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் கத்தோலிக்க கல்லூரிகளில் பல உயர் பொறுப்புக்களில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையிலேயே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொழும்பு உயர் மறைமாவட்டத்திற்கு அருட் தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை துணை ஆயராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அருட்தந்தை அன்ரன் ரஞ்சித், யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது ஆரம்ப கல்வியை கொழும்பு கொட்டாஞ்சேனை புனித ஆசிர்வாதப்பர் கல்லூரியில் ஆரம்பித்து, பின் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் தனது படிப்புகளை முடித்துள்ளார்.

அதன் பின் யாழ். புனித பிரான்சிஸ் சவேரியார் குருமடத்தில் இணைந்து முதல் மூன்று வருட மெய்யியல் படிப்புகளை நிறைவுசெய்துள்ளார்.

பின்னர், யாழ் பல்கலைகழகம் சென்று நான்கு வருடங்கள் கணிதத்துறையில் படித்து பட்டம் பெற்று விட்டு[Bachelor’s Degree in Mathematics ]மீண்டும் கண்டி குருமடத்திற்கு சென்று தனது நான்கு வருட இறையியல் படிப்புகளை நிறைவேற்றினார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்டக் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

>குருப்பட்டம் பெற்ற பின் அருட்தந்தை அன்ரன் ரஞ்சித், இங்கிலாந்து நாடு சென்று University of Middlesex யில் படித்து [Masters in Education ], பின் யாழ் பல்கலை கழகம் சென்று அங்கு படித்து பட்டம் [Masters in Philosophy]பெற்றார்.

பின் கொழும்பு புனித இராயப்பர், புனித செபஸ்தியார், மற்றும் புனித சூசையப்பர் கல்லூரிகளில் ஆசிரியாராக பணியாற்றினார்.

அதன் பின் புனித இராயப்பர், புனித சூசையப்பர் கல்லூரிகளில் உதவி அதிபராக பணியாற்றி விட்டு, கடந்த வருடம் மொரட்டுவை புனித செபஸ்தியார் கல்லூரியில் அதிபராக நியமிக்கப்பட்டு, இன்று வரை அக்கல்லூரியின் அதிபராக கடமையாற்றிக்கொண்டிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் கொழும்பு இறையியல் கல்லூரி தமிழ் பிரிவுக்கும் இவர் பொறுப்பாக இருகின்றமை குறிப்பிடத்தக்கது.