யாழ்ப்பாணத்துக்குத் தொழில் நிமித்தம் வந்திருந்த பொலனறுவை சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சனிக்கிழமையே பொலனறுவையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
கொரோனா அறிகுறிகளுடன் எழுவை தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தற்போது அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இன்று இரவு பரிசோதனை முடிவு வெளியாகும்.
பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவருடன் தொடர்புடையவர்கள் எழுவைதீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

