கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று; இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் ஊடக அறிக்கை

321 0

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கந்தகாடு கொரோனா தொடர்பில் ஊடகத்துக்கு அவர் தெரிவித்ததாவது,

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இந்நிலையில், அங்கிருந்த அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டுள்ளதாகவும், அத்தோடு, கொரோனா நோய்க்கான அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.

நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை வழங்குவதற்காகப் புலனாய்வு பிரிவினர் 24 மணித்தியாலங்களும் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு, நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கந்தகாடு கொரோனா முழுமையாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமையினால் நாட்டை மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சில பகுதிகளில் இன்னும் நோயாளர்கள் பலரைக் அடையாளம் காண வாய்ப்புகள் உள்ளமையினால் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கெனவே மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.