கொவிட் 19 சமூகத்துக்குள் பரவும் ஆபத்து – தொற்றுநோய் பிரிவு அதிகாரி

320 0

கொரோனா வைரஸ் சமூகத்துக்;குள் பரவும் ஆபத்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி மருத்துவர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் உளநல ஆலோசனை உத்தியோகத்தர் பேருந்து மூலம் தனது வீட்டிக்கு சென்றுள்ளார்,அதன் பின்னர் அவர் மருத்துவர் ஒருவரை சந்தித்;துள்ளதுடன் பல வீடுகளுக்கு சென்றுள்ளார் என தெரிவித்துள்ள சுடத்சமரவீர இதன் காரணமாக கொரோனா வைரஸ்பரவல் ஆபத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கந்தக்காடு நிலையத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் தொடர்புள்ளமை வெளிப்படையாக தெரியவந்துள்ளதால் இந்த வைரஸ் பரவுவது வெளிப்படையாக தெரிகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.