நிலைமையை சரியான விதத்தில் மதிப்பிடாமல் தேர்தலை நடத்தினால் ஆபத்து – ருவான் விஜயவர்த்தன

275 0

பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு சுகாதார அதிகாரிகளுடன் உடனடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என ருவான் விஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தேர்தலை நடத்துவது பாதுகாப்பானதா என்பதை தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது சுற்று ஆபத்து ஆரம்பமாகியுள்ளதா என நாங்கள் யோசிக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் மக்களிடமிருந்து விபரங்களை மறைக்கின்றதுபோல தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

நிலைமையை சரியான விதத்தில் மதிப்பிடாமல் தேர்தலை நடத்தினால் அதன் பின்னர் நாடு எதிர்கொள்ளக்கூடிய பெரும் பாதிப்பிற்கு அரசாங்கமும் தேர்தல் ஆணைக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.