டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு சென்றபோது, டயர் வெடித்து நடுரோட்டில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த மதுபாட்டில்களை ‘குடிமகன்கள்’ அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி, எரியோடு, தென்னம்பட்டி ஆகிய மதுபான கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டி என்னுமிடத்தில் மினிலாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.