சிறிலங்காவில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 33 பேர் குணமடைந்தனர்

238 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,711 ஆகி அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்று உறுதியான 2042 பேரில் இதுவரை 320 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.