பெரம்பலூரில் கொரோனா வைரசை தடுக்கும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வர்த்தக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பெரம்பலூர் நகர வணிகர்களுடன் நேற்று போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதற்கு மகளிர்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் தலைமை தாங்கினார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடைகளில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக வணிகர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வட்டம் போட்டிருக்க வேண்டும். கடைகளுக்கு முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு வணிகர்கள் பொருட்களை வழங்கக்கூடாது. அவர்களை முககவசங்கள், கையுறைகள் கட்டாயம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும்.
இந்த கூட்டத்தில் வணிகர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் போலீஸ் ஏட்டு செல்வம் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.