18 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் உறைபனியில் யோகா செய்த இந்திய ராணுவ வீரர்கள்

226 0

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லடாக்கில் உறைபனியை பொருட்படுத்தாமல் இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்தனர்.

சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோன வைரஸ் காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து யோகா செய்தனர்.
இந்திய ராணுவ வீரர்களும் யோகா செய்தனர். லடாக் – தீபெத் எல்லையில் லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் வீரர்கள் மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் யோகா செய்தனர்.
லடாக்கில் யோகா செய்த இந்திய ராணுவ வீரர்கள்

அதேபோல் இந்தியா – சீனா எல்லையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களும் யோகா செய்தனர்.