பாகிஸ்தானின் நிகியல் மற்றும் பாக்சர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் நிகியல் மற்றும் பாக்சர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.