யாழ். மாவட்டத்தில் 5000 ரூபா நிதி 91000 குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு!

256 0

அரசாங்கத்தினால் வழங்கப்படும் இடர்கால இரண்டாம் கட்ட உதவித் தொகை 5000 ரூபா நிதி இன்று வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 91 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். மகேஸ்வரன் தெரிவித்தார்.

சமுர்த்தி திணைக்களத்தினூடாக நாட்டில் கொவிட்19 தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு இடர்கால நிதியாக அரசினால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா முதலாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டு அரசாங்கத்தினால் இரண்டாம் கட்டமாகவும் 5000 ரூபா நிதி வழங்கும் வேலைத்திட்டம் கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்டு முதலாம் கட்டம் 5000 ரூபா நிதியினை பெற்றுக் கொண்ட ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 503 குடும்பங்களில் தற்போது வரை 91ஆயிரத்து 183 குடும்பங்களுக்கு நிதி வழங்கி வைப்பட்டுள்ளது.

எனினும் திணைக்களத்திலிருந்து எமக்கு நிதி விடுவிக்கின்ற ஒழுங்கின்படி நிதி பெறாதவர்களுக்கு குறித்த நிதியானது வழங்கி வைக்கப்படும்.

எனவே மக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை 5000 ரூபா நிதியினை பெறாதவர்கள் தங்களுடைய பகுதி சமுர்த்தி உத்தியோகத்தரின் அறிவுறுத்தலினை பின்பற்றி குறித்த நிதியினை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.