மணல் அகழ்வை தடுத்தோர் மீது தாக்குதல்; அறுவர் காயம்!

246 0

மட்டக்களப்பு – வாகனேரி பகுதியில் சட்டவிரோதமாக மண் ஏற்றுவதற்கு சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (28) இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனேரி குளம் பகுதியில் ஓட்டமாவடியை சேர்ந்தவர்களினால் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்களினால் பல்வேறு தடவைகள் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அப்பகுதிகளில் தொடர்ச்சியான மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நேற்று மாலை அப்பகுதிக்கு மண் அகழ்வுக்கு சென்றவர்களை அப்பகுதியை சேர்ந்த சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது மண் அகழ்வுக்கு சென்றவர்களினால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் ஒரு உழவு இயந்திரத்தில் வந்தும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல்கள் காரணமாக பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.