ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 32 இலங்கையர்கள் இணைந்துள்ளனர் – அரசாங்கம்!

270 0

wijeyadasa-rajapaksheஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இலங்கையிலிருந்து 32பேர் இணைந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரவு செலவுத்திட்டம் மீதான விவாகத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், சில இணையத்தளங்கள் போலியான வதந்திகளைப் பரப்பக்கூடிய உண்மையற்ற தகவல்களை வெளியிடுகின்றன. இதனாலேயே பொதுமக்களும் வழிநடத்தப்படுகின்றனர்.

அத்துடன் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செய்திகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இணையத்தளத்தின் சொந்தக்காரரை சர்வதேச காவல்துறையின் உதவியோடு சிறீலங்காவுக்குக் கொண்டுவந்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.