இந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு ஹெரோயின் கடத்திய நபர் கைது

265 0

drug-arrestsஇந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவிற்கு ஹெரோயின் கடத்திய நபர் ஒருவர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் எனவும் இவர் இந்தியாவின் சென்னையில் இருந்து நேற்று மதியம் ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இவர் விழுங்கி வந்த ஹெரோயின் குளுசைகளை அகற்றுவதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் விழுங்கியிருந்த  குளுசைகளில் 5 அகற்றப்பட்டுள்ளது என்றும் விமானநிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.