ஜனாதிபதியின் இணையத்தளத்தினை முடக்கிய மாணவனை ஜனாதிபதி சந்தித்தார்

284 0

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினுள் ஊடுறுவி அதனை முடக்கிய மாணவனை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சந்தித்துள்ளார்.

அம்மாணவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து இன்று பிற்பகல் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் பின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் திறமையுடைய இளைஞர்களை ஊக்குவிப்பது எங்கள் கடமையென பதிவிட்டுள்ளார்.