மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி

264 0

pikku-1மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிராம சேவகரை அச்சுறுத்திய சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

நில ஆக்கிரமிப்பு பிரச்சினையொன்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி, குறித்த கிராம சேவகரை அச்சுறுத்தியதுடன் தகாத வார்த்தை பிரயோகங்களைக் கொண்டு தூற்றியிருந்தார்.

இந்த நிலையில், கொழும்பு – கிங்ஸி வீதியிலுள்;ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி டொமினிக் இந்த முறைப்பாட்டை மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தல் விடுக்கின்ற சந்தர்ப்பத்தில், அதனை தடுத்து நிறுத்த பொலிஸார் தவறியமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்த தேரர் கைது செய்யப்படாமை உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.