சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த பொறியியலாளர்

244 0

1b39a4f6d798eபாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தில் பொறியியலாளர் ஒருவர் அமர்ந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹார மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.