அளுத்கமவில் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பு

242 0

197488493busஅளுத்கமவில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தனியார் பஸ்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்டவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தொகையை குறைக்குமாறு கோரிய மனுவொன்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் அளுத்கம ஒருங்கிணைப்பாளர் குமாரரத்ன ரேணுக கூறினார்.

தமது போராட்டத்திற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் நாடு பூராகவும் போராட்டத்தை விஸ்தரிப்பதாக அவர் மேலும் கூறினார்.