பொருளாதாரத்தை அரசாங்கம் வீணடித்துள்ளது – மஹிந்த

280 0

mahindaதாம் கட்டியெழுப்பிய நாட்டின் வலுவான பொருளாதாரத்தை தற்போதைய அரசாங்கம் வீணடித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை – வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

வரி அதிகரிப்பு மேற்கொண்;டதை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமிதமாக கூறி வருகின்றனர்.

தற்போது பாரிய அளவில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தானே செய்ததாக மார் தட்டிக் கொள்கிறது.

தமது அரசாங்கம் செய்து வைத்ததை இவர்களால் தான் விற்பனை செய்ய முடியும் என கூறுகிறார்கள்.

மத்திய வங்கியை விற்பனை செய்யும் முயற்சிகளும் தற்போது மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.