இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு வந்து சிறுநீரகத் தொகுதியை விற்பனை செய்த இந்தியர்கள், தங்களுக்கு கிடைத்த பணத்தை கொழும்பில் இரவு விடுதிகளில் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு மிரிஹானை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இந்தியர்கள் கடந்த எட்டாம் திகதி தப்பிச் சென்றினர்.
இதனை அடுத்து மூன்று தினங்களின் பின்னர் அவர்கள் மன்னாரில் வைத்து கைதாகி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர்களின் கையடக்கதொலைப்பேசிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.