டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், நாட்டின் சர்வதேச தொடர்புகளுக்கு உரிய கௌரவத்தை வழங்குவார் என்று ஜனாதிபதி பராக் ஒபாமா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஒபாமா ஏதென்ஸ்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
இதனை அடுத்து அவர் ஜேர்மனி மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கும் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக அவர் மேற்கொள்ளும் இறுதி வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்துக்கு முன்னதாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஒபாமா, டரம்ப் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் தம்முடன் அவர் பேசும் போது, நேட்டோ படையின் அங்கத்துவத்தை பேணுவதில் விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

