சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் – பைசர் முஸ்தப்பா

417 0

625.472.560.320.505.600.053.800.900.160.100அடுத்தவருட சித்திரைப் புத்தாணடுக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தொகுதிகளில் தேர்தலை நடத்த முடியாதென அனைத்து கட்சிகளும் தெரிவித்துள்ளன.
அத்துடன் உள்ளுராட்சின்ற தேர்தலை விரைவில் நடத்துமாறும் கோறுகின்றனர்.
விரைவில் இது தொடர்பான செயற்பாடுகள் நிறைவுசெய்யப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
அதேவேளை அடுத்த உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும்வரையில் அதன் அதிகாரங்கள் அனைத்தும் உள்ளுராட்சிமன்ற ஆனையாளர் மற்றும் செயலாளர்களிடம் கையளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment