இலங்கைக்கு 4 புதிய தூதுவர்கள்-2 உயர்ஸ்தானிகர்(காணொளி)

349 0

cb-governor-appoinmentஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஜனாதிபதி மாளிகையில் நேற்று கையளித்தனர்.

இலங்கைக்கென நியமிக்கப்பட்டுள்ள உக்ரேன், பூட்டான், எதியோப்பியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் தென்னாபிரிக்கா மற்றும் சீசெல்ஸ் நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை இதன்போது ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஸ த சில்வா மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.