மட்டக்களப்பில் கிராமசேவகரை அவமதித்த தேரர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்-பொலிஸார்(காணொளி)

330 0

downloadமட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தின்போது சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் சிசிர தெத்ததந்திரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் எனவும், மட்டக்களப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற உறுதி மொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன், பிரதேச செயலக நடவடிக்கைகளும் ஆரம்பமானது.