சட்டவிரோதமான மதுபானம் தயாரித்த மூன்று பேர் கைது

235 0
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட வேளையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட முன்று சந்தேக நபர்களை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவம்  நேற்று (06) திங்கள் கிழமை மாலை வேளையில் இடம்பெற்றதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நோரவூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஞஸ்ரீ தோட்டபகுதியில் சட்டவிரோதமான மதுபானம் தயாரித்து மக்களுக்கு அதிகவிலையில் விற்பனை செய்து வரும் சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரனவீர தலைமையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு சட்டவிரோத மதுபானம் தயாரிப்பிற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் டிக்கோயா புளியாவத்தை இன்ஞஸ்ரீ தோட்ட பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகநபர்கள் மூன்று பேரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.