கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு

206 0

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு 09, கொழும்பு 14 மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்துடன் கொழும்பு 15 பகுதியில் குறைந்த அளவிலேயே நீர் விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.