மலையக இளைஞர் யுவதிகள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி

257 0

கொழும்பு உள்ளிட்ட வெளியிடங்களில் வாழும் மலையக இளைஞர், யுவதிகள்,  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டள்ளதால் தாங்கள்  சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, இவர்களுக்கு தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு அமைச்சரவை இன்று (1) அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இந்த விடயம் குறித்து, ஜனாதிபதி ,பிரதமர்,இரானுவ தளபதி ஆகியோர் கவனத்திற்கு கொண்டு வந்தததையடுத்து, இளைஞர்,யுவதிகளை வீடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அனுப்பப்படுபவர்கள் சுயதனிமைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.