கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதியின் புதிய திட்டம்

474 0

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, நாட்டின் கல்வி செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு, ஜனாதிபதி விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட செயலணி அமைக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (31.03.2020) வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்திருந்துள்ள நிலையில், கல்வித்துறை செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது பாதுகாக்கும் நோக்கில் இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டின் ஆரம்ப கல்வி, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை கல்வித் துறைகளின் செயற்பாடுகளை இந்த செயற்குழு முறையாக மேம்படுத்த உள்ளது

இதற்கு உயர்கல்வி, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு அபிவிருத்தி தொழில் மற்றும் தொழிலாளர்கள் சம்பந்தமான அமைச்சின் செயலாளர் டி.எம்.ஏ.ஆர்.பி திசாநாயக்க தலைமையிலான 26 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் டி.எம்.எம்.அபேகுணவர்தன மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.கீர்த்திரத்ன, விசாக்கா வித்தியாலய அதிபர் சந்தமாலி அவிருப்போல மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் குழு உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.