திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு குடும்பம்

319 0

திருகோணமலை கண்டி வீதியில் நேற்று (31.03.2020) திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள 5 ஆம் கட்டைப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.

நேற்று மாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஐந்தாம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கு கொவிட்19 நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து இளைஞரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.