திருகோணமலையில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கொலை-கணவன் கைது(காணொளி)

330 0

tricomallideதிருகோணமலை – கன்னியா பகுதியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தினால் குத்தி இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 32 வயதான பெண்ணொருவரும், 8 மற்றும் 10 வயதான இரு பெண் குழந்தைகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 34 வயதான ராஜலக்ஷ்மன் என்ற சந்தேகநபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

குடும்ப தகறாரே இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் திருகோணமலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.