கொரோனா வைரஸ் குறித்து போலி பிரசாரம் செய்தவர் கைது

232 0

கொரோ வைரஸ் தொற்று தொடர்பில் சமூகவலைத்தளத்தின் ஊடாக போலிப் பிரச்சாரம் வழங்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குருணாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு குற்றப் புலனாய்வு பிரிவினரின் சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.வைரஸ் தொற்று தொடர்பில் போலியான தகவல்களை பரப்பவேண்டாம் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்த போதும், இவ்வாறு சமூகவலைத்தளங்களின் ஊடாக போலித் தகவல்களைப்பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்திருந்த போதும் சிலர் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றனர்.