பாண்டியன் குள இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!

317 0

1721952539arres5முல்லைத்தீவு மாவட்டம், பாண்டியன்குளம், விநாயகபுரத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யோகராசா விதுசன், வயது 20 என்ற குறித்த இளைஞனே சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டம், பாண்டியன் குளம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரத்தினைச் சொந்த இடமாகக்கொண்ட இளைஞர் ஒருவர் சுன்னாகம் வணிக நிலையமொன்றில் பணியாற்றுகின்றார்.

குறித்த இளைஞர் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவாக் குழு என அழைக்கப்படும், ஆயுதக் கும்பலுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனை, நேற்றையதினம் (சனிக்கிழமை) அவரது வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எழுத்துமூலமாக தெரியப்படுத்தியதாகவும், ஆனால் குறித்த இளைஞன் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்ற விபரத்தினை அவர்கள் தெரியப்படுத்தவில்லை அறியக்கிடைத்துள்ளது.