யாழில் தாவடி-சுதுமலை வீதியூடான போக்குவரத்துக்குத் தடை!

223 0

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதி ஊடான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தாவடிக் கிராமம் முழுமையான கண்காணிப்பில் உள்ள நிலையில் இன்று காலை 8.30 மணியில் அப்பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது உள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில், கிராம சேவகர் , பிரதேச செயலாளர் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர், பொதுச் சுகாதார அதிகாரி, பொலிஸார், இராணுவத்தினர் அங்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.