கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்வு!

234 0

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை இன்று காலை அறிவிப்பின்படி 65 ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 218 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். தேவையேற்படும் பட்சத்தில் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படுமானால் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.