ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சி – ராஜித!

263 0

ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாட்டு மக்கள் கட்சி, நிறம், சின்னம் என்று பாராது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துடன், இணைந்து செயற்படினும் அவர்களுக்கு இடையிலும் பல முரண்பாடுகள் இருக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தரப்பினருக்கு பௌத்த மதகுருமார், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலரின் ஆதரவு காணப்பட்டது.தற்போதைய நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான சக்தியாக மாறத் தயாராகவுள்ளனர்.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. இந்த அரசாங்கத்தினால் தேர்தல் மேடைகளில் நாட்டுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

அதற்கு புறம்பாக மாறுபட்ட கோணத்திலேயே இந்த அரசாங்கம் பயணிக்கின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.