‘அவள் தனித்துவமானவள்’ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பில் நடை பவனி!

260 0

‘அவள் தனித்துவமானவள்’ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு லியோ கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நடை பவனி நடைபெற்றது.

இந்த நடைபவனி மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டு அரசடி மணிக்கூட்டு கோபுரத்தினைச் சுற்றி மீண்டும் காந்தி பூங்காவை வந்தடைந்தது.

கழகத் தலைவர் லியோ டிரோஷன் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வினை செயலாளர் லியோ வெனிற்ரா தொகுத்து வழங்கியிருந்தார்.

பெண் உரிமை கோரிய வாசகங்களுடன் நடன நிகழ்வுகள், விழிப்புணர்வு நாடகம், பேச்சு, பாடல் போன்ற கலை நிகழ்வுகளும் அங்கு இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.