பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற பேஸ்புக் விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட 77 இளைஞர்,யுவதிகள் நேற்று (8) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 77 பேரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்திய நிலையில் இருந்த போதே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களுள் 60 இளைஞர்களும் 17 யுவதிகளும் உள்ளடங்குவதாக பன்னிப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

