நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கடமையின் நிமித்தம் கடிதங்களை அனுப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த, விசேட முத்திரையுடனான அஞ்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட முத்திரைகளை, அஞ்சல் அலுவலகங்கள் பொறுப்பேற்க வேண்டுமென, அவர் பணித்துள்ளார்.
இது தொடர்பான சுற்று நிரூபம், சகல மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதிகள், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர்கள், அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.